ஆப்கானில் சியா பிரிவு மசூதி அருகே வெடித்த குண்டு - 8 பேர் கொடூர பலி
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுத்தலம் அருகே குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுத்தலம் அருகே குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சியா பிரிவினர் மத வழிபாட்டு தலம் அருகே குண்டு வெடித்ததில் எட்டு பேர் பலியாகினர், 18 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்துவது குறிப்பிடத்தக்கது.