சென்னையில் இருந்து 2.5 கோடி மதிப்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு சென்ற பூணூல் மற்றும் காசுமாலை

திருப்பதி ஏழுமலையானுக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க பூணூல் மற்றும் காசு மாலையை சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார்.

Update: 2022-06-10 12:52 GMT

திருப்பதி ஏழுமலையானுக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க பூணூல் மற்றும் காசு மாலையை சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார்.

சென்னையை சேர்ந்த சரோஜா சூரிய நாராயணன் என்ற அந்த 85 வயதான பக்தை தேவஸ்தான அதிகாரியான தர்மா ரெட்டியிடம் அவற்றை வழங்கினார்.

வைர கற்களுடன் கூடிய தங்க பூணூல், தங்க காசுமாலை ஆகியவை சுமார் 4 கிலோ 150 கிராம் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு சுமார் 2.5 கோடி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.      

Similar News