பணம் குவிக்கும் ஆசையில் ஆறு வயது சிறுவன் நரபலி

பீகாரில் நரபலி கொடுத்தால் பணம் குவிக்க முடியும் என்ற தவறான ஆசையில் ஆறு வயது சிறுவனை இரு நபர்கள் சேர்ந்து கொலை செய்தனர்.

Update: 2022-10-03 07:00 GMT

பீகாரைச் சேர்ந்தவர்கள் விஜய்குமார், அமர்குமார், இவர்கள் டெல்லியில் லோதி காலணியில் தங்கி கட்டுமான தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அதே இடத்தில் கட்டுமான தொழிலாளியாக உள்ள ஒருவருக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருந்தான். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு அந்த சிறுவனை விஜயகுமாரும், அமர்குமாரும்  சமையலறை பகுதிக்கு அழைத்தனர்.


பிறகு அவனது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். அப்போது அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தனர். மகனை காணாமல் தேடிய அவனுடைய தந்தை கழுத்தறுக்ககப்பட்ட நிலையில் அவனை பிணமாக பார்த்து திடுக்கிட்டார்.அவர் போலீசில் புகார் செய்தார்.


அதன் பேரில் விஜய்குமாரும் அமர்குமாரும் கைது செய்யப்பட்டனர். தாங்கள் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.போதைப் பொருள் சாப்பிட்டவுடன் பணம் குவிக்க நரபலி கொடுக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை உண்டாக்கி இந்த கொலையை செய்ததாக அவர்கள் கூறினார்.





 


Similar News