செல்போன் செயலி மூலம் ரயில்வே டிக்கெட் பதிவு செய்ய கூடுதல் வசதி - புதிய திட்டங்களால் அசத்தும் ரயில்வே!

ரயில்வே டிக்கெட் பதிவு செய்ய கூடுதல் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் அதிக தூரத்தில் இருந்தும் எடுக்கலாம்.

Update: 2022-11-12 06:45 GMT

ரயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு செயலி மூலம் பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் போன்றவற்றை பதிவு செய்ய முடிகிறது. இதனால் பயணிகள் டிக்கெட் கோட்டையில் காத்திருக்க தேவையில்லாததால் அவர்களின் நேரமும் மிச்சமாகிறது. இந்த செயலி மூலம் பயணிகள் புறநகர் அல்லாத பகுதிகளில் ஒரு ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பதிவு செய்ய முடிகிறது.


அது தற்போது ஒரு ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் பகுதிகளில் இந்த தூரம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினசரி பாசஞ்சர் ரயில்களிலும் நீண்டதூர ரயில்களிலும் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து கிலோ மீட்டர் தூர கட்டுப்பாட்டை 10 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்க விரும்பும் மண்டல ரயில்வே நிர்வாகங்கள் அது குறித்து ரயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





 


Similar News