அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அமித்ஷா பயணம் - 'துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடக்கம்' !

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அருணாச்சலப்பிரதேச எல்லை பகுதிக்கு சென்றார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2023-04-11 07:30 GMT

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அருணாச்சலப்பிரதேச எல்லை விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து சர்ச்சையாக நீடித்து வருகிறது . இந்த பிரச்சனையை மேலும் நீட்டிக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சீனா சமீபத்தில் பெயர் மாற்றியுள்ளது. அங்குள்ள இடங்களுக்கு சீன பெயர் சூட்டப்படுவது இது மூன்றாவது முறையாகும். சீனாவின் இந்த அத்துமீறலை இந்தியா வன்மையாக கண்டித்து இருக்கிறது. சீனாவில் இந்த அப்பட்டமான விதிமுறைகளை நிராகரிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது .


மேலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து இருக்கிறது. எப்போதும் இருக்கும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. இவ்வாறு அருணாச்சல பிரதேச விவகாரம் இந்தியா சீனா இடையே மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் அந்த மாநிலத்தில் சர்வதேச எல்லை பகுதிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சென்றார். அங்கு சீன எல்லையை ஒட்டி உள்ள 'கிபிதூ' கிராமத்துக்கு சென்ற அவர் அங்கு துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


அமித்ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'சாங்னன்' சீனாவின் பிராந்தியம் .இந்த பகுதியில் இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாகும் .இது எல்லை பகுதிகளின் அமைதிக்கு உகந்தது அல்ல. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.





 


Similar News