சிறுமியை வளர்ப்பு தந்தையே சீரழித்து கருமுட்டை விற்ற விவகாரம் - சிக்கும் பல தனியார் மருத்துவமனைகள்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-06-06 13:00 GMT

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பலாத்காரம் செய்து சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனை மூலமாக விற்பனை செய்து வந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவரது இரண்டாவது கணவர் புரோக்கராக செயல்பட்ட மாலதி மற்றும் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்தல் அன்பு ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

இதில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை எடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது, சிறுமியின் வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர் மேலும் விசாரணையில் திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சென்னையில் மருத்துவ இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஓசூர் திருவனந்தபுரம் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று அங்கும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Source - News 7 Tamil

Similar News