அயோத்தி தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத்தான் வரவே விரும்புகிறோம்: இல்லை என்றாலும் நிலம் முழுவதையும் அவர்களுக்கே திருப்பிக் கொடுப்போம் !! மொகலாய மன்னர் பாபரின் பேரன் சமரச அறிவிப்பு
அயோத்தி தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத்தான் வரவே விரும்புகிறோம்: இல்லை என்றாலும் நிலம் முழுவதையும் அவர்களுக்கே திருப்பிக் கொடுப்போம் !! மொகலாய மன்னர் பாபரின் பேரன் சமரச அறிவிப்பு
பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி ராமர் கோவில் நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளி வரவுள்ளது. உணர்வு பூர்வமான அதே சமயம் பரபரப்பும், பதற்றமும் நிறைந்த இந்த தீர்ப்பை அனைவரும் மூச்சை அடக்கிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முக்கிய நேரத்தில் பாபர் வழி மொகலாயப் பேரரசர்களின் தற்போதைய வாரிசும், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் பேரனான இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டூசி நடுநிலையான கருத்துக்களை கூறியுள்ளார்.
இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டூசி குடியரசுத்தலைவருக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் தனது மூதாதையரான பேரரசர் பாபர் சமய சார்பற்றவர் என்றும் அவரால் அந்த கோவில் இடிக்கப்படவில்லை என்றும், ஆனால் அவரது தளபதியான மீர் பகி யால்தான் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாகவும், அந்த சம்பவத்துக்காக இப்போது தான் எனது மூதாதையர் சார்பில் இந்து சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறினார்.
அவர் நியூஸ் எக்ஸ் தொலைகாட்சி ஓன்றுக்கு பேட்டி அளிக்கையில் “ தீர்ப்பு ராமர் கோவிலுக்கு ஆதரவாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவ்வாறு நேர்ந்தால் இன்ஷல்லா புகழ் ( அல்லா அல்லது தெய்வத்தின் புகழ் ) இந்து சமூகத்துக்குத்தான் செல்லும் என்றும் கூறினார்.
பாபருக்குப் பிறகு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சொத்துக்களைக் கைப்பற்றியது, கிழக்கிந்திய கம்பெனிக்குப் பிறகு அது இந்திய அரசுக்குச் செல்லும் என்று அவர் கூறினார். ஒரு வேளை தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வராவிட்டாலும் 100 சதவீதம் நிலத்தை இந்திய அரசிடம் ஒப்படைத்திடுவோம்.