'எக்ஸ்' தளத்தில் பயனரின் ஒப்புதலுடன் மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள் - எலான் மஸ்க் அறிவிப்பு

'எக்ஸ்' தலத்தில் பயனரின் ஒப்புதல் உடன் மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Update: 2023-09-03 15:15 GMT

பிரபலத் தொழில் அதிபர் எலான் மஸ்க டுவிட்டர் சமூக வலைதளத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ஜூலை பிற்பகுதியில் டுவிட்டரின் லோகோ மாற்றப்பட்டு எக்ஸ் சமூக வலைத்தளமாக மாறியது. தற்போது எலான் மஸ்கின் 'எக்ஸ்' நிறுவனம் கை ரேகைகள் உட்பட பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வருகிறது.


ஆகஸ்டு மாதம் இறுதி வரை 'எக்ஸ்' சமூக வலைதளம் பயோமெட்ரிக் தகவல்கள் எதையும் கேட்டது இல்லை. தற்போது பயனர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் அடையாள நோக்கங்களுக்காக உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். இது முற்றிலும் பயனரின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Similar News