விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரை- கைது செய்ய கோரிக்கை !

Top Stories.

Update: 2021-09-01 10:40 GMT

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களு போட்டியாக ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்று அண்மையில் வெளியான நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நோட்டீஸ் விநியோகம் செய்த செயின்ட் பால் கல்லுாரி, பள்ளியின் தலைவர் டேவிட் மற்றும் கிறிஸ்தவ அமைப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் கிறிஸ்தவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய ஜெப யாத்திரையின் விளைவால் தான் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செயின்ட் பால் கல்லூரி மற்றும் பள்ளியின் சார்பாக நோட்டீஸ் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறையை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தினால் தான் இவ்வாறு நோட்டீஸ் அச்சிடப்பட்டுள்ளது என்று கூறி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை வெளியிட்ட டேவிட் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டேவிட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யாவிட்டால் நாளை மேட்டுப்பாளையம் சாலையில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Source : Dinamalar

Tags:    

Similar News