தி.மு.க நகர செயலாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண் சுகாதார ஊழியர்!

Breaking News

Update: 2021-09-09 12:15 GMT

குத்தாலத்தில் தி.மு.க நகர செயலாளர் சம்சு தகாத வார்த்தைகளால் பேசியதால் சுகாதார பணியாளர் நதியா என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் வீடுகள்தோறும் சென்று சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு குத்தாலம் நகர தி.மு.க செயலாளர் சம்சு தனக்கு வேண்டியவர்களை வேலைக்கு சேர்த்துள்ளார்.

இதனால் வேலை பறிபோன சோகத்தில் குத்தாலம் நகர தி.மு.க செயலாளர் சம்சு'விடம் சென்று நான்கு பெண்களும் முறையிட்டுள்ளனர். உடனே அவர் வேலை பற்றி ஏதும் கூறாமல் நதியாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நதியா, வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நதியாவை, உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையளிக்க இயலாததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


Source - Daily Hunt

Tags:    

Similar News