கள்ளக்காதலி பேசாததால் கோவில் சிலையை உடைத்த வாலிபர் ! - காவல்துறையினர் விசாரணை!

உண்மையிலேயே கள்ளக்காதலி பேச மறுத்ததால் கோவில் சிலையை உடையதாரா அல்லது மதம் மாறுதல் தொடர்பான பிரச்சனையில் கோவில் சிலையை உடைத்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்

Update: 2021-08-21 06:26 GMT

சேலத்தில் கள்ளக்காதலி பேச மறுத்ததால் கோவில் சிலைகளை வாலிபர் ஒருவர் உடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்துக்காடு பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்கு சென்ற சங்கர் என்பவர் கோவிலில் இருந்த சிலையை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். பின்னர் காவல்துறையினரின் விசாரணையில் மாட்டிக்கொண்ட அவர் சிலை உடைத்ததற்காக கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

கூலி வேலை செய்து வந்த அவர் ஆத்துக்காட்டில் உள்ள கள்ளக்காதலியை பார்க்க சென்றபோது மதுபோதையில் இருந்ததால் அவருடன் அவரது கள்ளக் காதலி பேச மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் அங்குள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள சிலைகளை சேதப்படுத்தி உள்ளார். பின்னர் போதை தெளிந்தவுடன் அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார். உண்மையிலேயே கள்ளக்காதலி பேச மறுத்ததால் கோவில் சிலையை உடையதாரா அல்லது மதம் மாறுதல் தொடர்பான பிரச்சனையில் கோவில் சிலையை உடைத்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆகும் நிலையில் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிலை உடைப்பு சம்பவத்தை காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தி சிலையை உடைத்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Source : Dinathanthi 

Tags:    

Similar News