ஒழுகும் மோசமான நிலையில் பேருந்துகள் - கவனிக்குமா அரசு?
அரசு பேருந்துகள் மோசமாக உள்ள நிலையில் தற்போது மழைக்காலத்தில் ஓடும் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு பேருந்துகள் மோசமாக உள்ள நிலையில் தற்போது மழைக்காலத்தில் ஓடும் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் நின்று கொண்டே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பசுவந்தனையிலிருந்து கோவில்பட்டிக்கு இரவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்ட பொழுது பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் அந்த பேருந்தின் மேற்கூரையில் ஆங்காங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழைநீர் பேருந்துக்குள் விழுந்துள்ளது.
இதனால் இருக்கைகள் முழுவதும் மழை நீரில் நனைந்தபடியே இருந்ததால் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அரசு இதனால் ஏதும் நடவடிக்கை எடுக்குமா என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.