சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் - பிரதமர் மோடி அதிரடிஅறிவிப்பு

சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-09-25 11:34 GMT

சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திய பிரதமர் மோடி முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் குணா தேசிய உயிரியல் பூங்காவுக்கு அண்மையில் கொண்டுவர சிவிங்கி புலிகளை குறிப்பிட்ட அவர் அதற்கு பெயர் பரிந்துரைக்கும்படி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். இது தொடர்பான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிவிங்கி புலிகளை முதலில் நேரில் காணும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Similar News