'பெத்தவங்க பேச்ச கேளுங்க' - மாணவிகள் மத்தியில் உருக்கமாக பேசிய அமைச்சர் சேகர்பாபு

'பெற்றோரின் பேச்சைக் கேட்டு மாணவிகள் நடக்க வேண்டும்' என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-05-28 01:45 GMT

'பெற்றோரின் பேச்சைக் கேட்டு மாணவிகள் நடக்க வேண்டும்' என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் 58வது ஆண்டு விழாவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதி மகளிர் கல்லூரியின் அனைத்து மாணவிகளும் பங்கேற்றனர் மேலும் முதல் மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் அமைச்சர் சேகர் பாபு இருந்து பதக்கங்களை வழங்கினார்.


அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டதாவது, 'வட சென்னையில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இருப்பினும் மாணவிகள் நீங்கள் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்' என மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.

Source - Polimer News



Similar News