அடேங்கப்பா.. பாலிவுட்டில் ஷூட்டிங்கை ஆரம்பித்த அக்‌ஷய் குமார்.. எப்படி நடத்துறாங்க பாருங்க.!

அடேங்கப்பா.. பாலிவுட்டில் ஷூட்டிங்கை ஆரம்பித்த அக்‌ஷய் குமார்.. எப்படி நடத்துறாங்க பாருங்க.!

Update: 2020-06-30 15:14 GMT

மும்பை: லாக்டவுன் நீக்கப்படாத நிலையில், நடிகர் அக்‌ஷய் குமாரின் ஷூட்டிங் நடைபெற்று இருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் லாக்டவுன் போடப்பட்டது.

அதன் காரணமாக கிட்டத்தட்ட 2 மாதங்கள் எந்தவொரு படத்தின் ஷூட்டிங்கும் நடைபெறவில்லை.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பாலிவுட் நடிகர்கள் ஆற்றிய பங்கு அபாரமானது. ஷாருக்கான் தனது அலுவலகத்தையே மருத்துவமனையாக மாற்றினார். சல்மான் கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் பணம் போட்டார். கோதுமை பைகளில் அமீர்கான் காசு போட்டதாக தகவல்கள் பரவின.

30 கோடி எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமர் மோடி அறிவித்த உடனே 25 கோடி நிதியை அளிக்க முன்வந்து நாட்டு மக்களை ஆச்சர்யப்படுத்தினார். மேலும், மும்பை மாநகராட்சிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் சுமார் 5 கோடி அளவில் நிதியுதவி வழங்கி உள்ளார். அக்‌ஷய் குமாரின் தாராள மனசை பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாரட்டினர்.

இந்நிலையில், லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு, பொதுமக்கள் என்ன என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளையும், ஆரோக்கிய விஷயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்கிற அரசு விளம்பரத்திற்காகவே இந்த அனுமதி கிடைத்திருக்கிறது. மாஸ்க் அணிந்தபடி, சின்ன யூனிட்டுடன் அனைத்து வித பாதுகாப்புகளையும் பின்பற்றி இந்த ஷூட்டிங் நடந்திருக்கிறது.

Similar News