"அல்லா அருகில் இருக்கும் போது வைரஸ் நம்மை எப்படி தொட முடியும்?", "கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்.. அது முஸ்லிம்களை பிரிக்கும் அரசின் சதி!" டெல்லி தப்ளிகி மாநாட்டில் மவுலானா நிஜாமுதீன் வீடியோ பேச்சுக்கள் அம்பலம்!
"அல்லா அருகில் இருக்கும் போது வைரஸ் நம்மை எப்படி தொட முடியும்?", "கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்.. அது முஸ்லிம்களை பிரிக்கும் அரசின் சதி!" டெல்லி தப்ளிகி மாநாட்டில் மவுலானா நிஜாமுதீன் வீடியோ பேச்சுக்கள் அம்பலம்!
டெல்லியில் எச்சரிக்கைகளை மீறி இஸ்லாமிய தப்ளிகி ஜமாத் நிகழ்ச்சி நடத்தி அகில இந்திய அளவில் ஆயிரக்கணக்கானவர்களை பங்கேற்க செய்தவர் மார்காஸ் மவுலானா என்கிற அமைப்பின் போதனையாளரும், நிர்வாகியுமான நிஜாமுதீன். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மட்டும் 1,500 பேர் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது தான் நூற்றுக்ககணக்கனவர்களுக்கு கொரோனா தொற்று ஒரே சமயத்தில் ஏற்பட்டு இன்று இந்தியாவையே குலுங்க வைத்துள்ளது.
இந்த நிஜாமுதீன் மீதுதான் இப்போது கெஜ்ரிவால் அரசு தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின்(1897) பிரிவு 3 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. டெல்லி அரசு விதித்த தடையை மீறி இவ்வாறு செய்ததால் இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறினார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மசூதிக்குள் மார்ச் 22-ஆம் தேதி வரை சுமார் 2500 பேர் மஸ்ஜித்தில் தங்க வைக்கப்பட்டனர், அவர்களில் 1,500 பேர் 23-ஆம் தேதி வெளியேறிய பின்னர், ஆயிரம் பேர் இன்னும் உள்ளே நுழைந்தனர். இந்த நிகழ்வின் போதுதான் நூற்றுக்கணக்கான கொரோனா நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இவர்களில் 163 பேருக்கு உடல்நிலை மிக மோசமாகி டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் அத்தனை சம்பவங்களும் வெளியில் தெரிய ஆரம்பித்தன.
வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிஜாமுதீன் தான் ஒன்றும் அறியாத ஒரு குழந்தை போல பேசியுள்ளார். எல்லாவற்றுக்கும் காரணம் பிரதமர் மோடி அறிவித்த அந்த ஒரு நாள் ஊரடங்குதான்( மார்ச் 22-ஆம் தேதி) காரணம் என்பது போல அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த மாநாட்டின்போது கூடியிருந்த கூட்டத்தின் போது அவர் பேசிய பேச்சுக்கள் இப்போது வீடியோவாக வெளி வந்துள்ளது. அதில் நிஜாமுதீன் கொரோனா வைரஸ் பற்றி கீழ் கண்டவாறு பேசியுள்ளார்.