உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய இந்தியாவை பிரதிபலிக்கும் நினைவு பரிசுகள்

இந்தோனேஷியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர் களுக்கு இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி பல நினைவு பரிசுகளை வழங்கினார்

Update: 2022-11-17 06:30 GMT

இந்தோனேஷியாவில் 'ஜி-20' உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாச்சார செழுமையை பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைப் படைப்புகளை பொருட்களை பிரதமர் மோடி நினைவு பரிசுகளாக வழங்கினார். இது பற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-


*அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 'சிருங்கர் ராசாவை' சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

*இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு வழங்கிய நினைவு பரிசு குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடை ஆகும்.

*ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு அவர் தந்தது, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோரா. இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா பிரதமர் மோடி வழங்கிய பரிசு,'படன் படோலா' துப்பட்டா ஆகும்.

*பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்ககோல்ஸ்,சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோருக்கு நினைவு பரிசாக தந்தது குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினை பொருளான 'அகேட்'  கிண்ணங்கள் ஆகும்.

*ஜி - 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான நேர்த்தியான வேலைபாடு கொண்ட வெள்ளி கிண்ணம் , இமயமலை பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்ற பிரதமர் மோடி வழங்கினார்.





 


Similar News