பிரதமர் மோடி மீது நம்பிக்கை - இந்தியர்களுக்கு இனி காவல்துறை சான்றிதழ் தேவை இல்லை என அறிவித்த சவுதி அரசு
இந்தியாவுடனான உறவு காரணமாக சவுதி இந்தியர்களுக்கு சவுதி விசா பெற காவல்துறை நற்சான்றிதழ் தேவை இல்லை என அறிவித்துள்ளது.
இந்தியாவுடனான உறவு காரணமாக சவுதி இந்தியர்களுக்கு சவுதி விசா பெற காவல்துறை நற்சான்றிதழ் தேவை இல்லை என அறிவித்துள்ளது.
சவுதி விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவை இல்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதில் இருந்து விலக்களிப்பதாக சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் சவுதியில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.