ஊழல்வாதிகள் தப்ப முடியாது பிரதமர் மோடி எச்சரிக்கை

ஊழல்வாதிகள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-10-29 13:15 GMT

மதிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் 31ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊழலை சிறிதும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியா நடைபோட்டு வருகிறது. ஊழலில் ஈடுபடும் எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ தப்ப முடியாது ஒவ்வொரு கவுரவமான மனிதரும் தங்கள் மீது பெருமை கொள்ளும் நம்பிக்கையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல வருங்காலத்திலும் எல்லா மட்டத்திலும் ஊழலுக்கு வாய்ப்பே இல்லை.அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் நாடாக வளர்ந்த நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





 


Similar News