ராமர் குறித்த அவதூறு கவிதை : இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

ராமர் குறித்து அவதூறு கவிதை வெளியிட்டுள்ளதால் இயக்குனர் பா. ரஞ்சித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-05-11 04:00 GMT

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-


சென்னையில் கடந்த ஏப்ரல் - 30ஆம் தேதி திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மைய கருத்தரங்க நடைபெற்றது. அதில் ரஞ்சித்தின் உதவி இயக்குனராக உள்ள விடுதலை சிகப்பி கவிதை என்ற பெயரில் இந்து தெய்வங்களை கேவலப்படுத்தி பேசி உள்ளார்.  இது சமூக ஊடகங்களில் வெளிவந்து மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. ஆனால் விடுதலை சிகப்பி மீது காவல்துறை வழக்கு போடவில்லை. புகாரின் அடிப்படையில் கண்துடைப்பு நாடகம் நடத்த வழக்கு பதிவு செய்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


விடுதலை சிகப்பி மீதான நடவடிக்கை இனி இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த எவருக்கும் தைரியம் வரக்கூடாது என்ற நிலையில் இருக்க வேண்டும். ராமனை இழிவு படுத்தும் கவிதையை அனுமதித்தது மட்டுமல்லாமல் அது தங்கள் கருத்து சுதந்திரம் என்று பேசும் பா.ரஞ்சித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி ஜனநாயக வழியில் சட்டரீதியில் இந்து முன்னணி போராடும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Similar News