ஆக்கிரமிப்பு எனக்கூறி தண்டையார்பேட்டையில் சுந்தர விநாயகர் கோவிலை இடிப்பு

சென்னையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுந்திர விநாயகர் கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

Update: 2022-11-28 02:04 GMT

சென்னையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுந்திர விநாயகர் கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்டதாக கூறி சுந்தர விநாயகர் கோவிலை ஜேசிபி எந்திரம் மூலம் அரசு அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர். இந்த கோவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும் இந்த கோவில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி இதனை இடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலை இடிக்க உத்தரவிட்டது. இதனை அடுத்து பலத்த பாதுகாப்புடன் கோவிலை இடிக்கும் பணி நடந்தது. கோவில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.



Source - Polimer News 

Similar News