கடந்த 8 ஆண்டுகளில் இரயில்வே துறையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எவ்வளவு தெரியுமா?

ரயில்வேயில் 3.5 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.மத்திய மந்திரி தகவல்

Update: 2022-08-06 11:15 GMT

ரெயில்வேயில் வேலை வாய்ப்புகள் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 2014 முதல் 2002 வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 204 பேருக்கு ரயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.

10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற மோடியின் அறிவிப்பிலும் ரயில்வேயில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது இதன் கீழ் மேலும் 1.40 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் அதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் விரைவில் முடிக்கப்படும் என்று ரயில்வேயில் இந்த ஆண்டு மட்டும் கூறினார்.

ரயில்வேயில் இந்த ஆண்டு மட்டும்

இதுவரை 18 ஆயிரம் பேர் பணி வாய்ப்புகளை பெற்றிருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் இந்திய ரயில்வே மிகப்பெரும் பங்காற்றி வருவதாகவும் தெரிவித்தார்.





 




Similar News