ரகசிய பேச்சு முடிந்து அதிகாரப்பூர்வமாக நடைபெறும் பா.ஜ.க – அ.தி.மு.க பேச்சுவார்த்தை? அ.தி.மு.க-வுக்கு 25, பா.ஜ.க-வுக்கு 15 தொகுதிகள்?
ரகசிய பேச்சு முடிந்து அதிகாரப்பூர்வமாக நடைபெறும் பா.ஜ.க – அ.தி.மு.க பேச்சுவார்த்தை? அ.தி.மு.க-வுக்கு 25, பா.ஜ.க-வுக்கு 15 தொகுதிகள்?
தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வு-க்கு 25 தொகுதிகள், பா.ஜ.க-வுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜ.க இடையே கூட்டணி உருவாகி உள்ளது. ரகசியமாக நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.
பா.ஜ.க கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்து அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தினார். பா.ஜ.க சார்பில் மத்திய மந்திரியுடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது. யார் - யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் மட்டும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.
தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க-வுக்கு 25 தொகுதிகள், பா.ஜ.க-வுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கும், பா.ஜ.க தனது கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்.
அ.தி.மு.க தனது தொகுதிகளில் த.மா.கா, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிக்கு தலா 1 தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.