போர் விமானங்கள் தரையிறங்கும் அளவிற்கு தரமான நெடுஞ்சாலைகள் - அசத்தும் மோடி அரசு

தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

Update: 2022-12-30 14:00 GMT

ஆந்திர மாநிலத்தில் 16ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் அவசரமாக தரையிறங்க 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வசதியை சோதித்து பார்க்க இந்திய விமானப்படை நேற்று சோதனை ஓட்டம் நடத்தியது. இதில் ஒரு சரக்கு விமானம் இரண்டு சுகோய் போர் விமானங்கள், தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் பங்கேற்றன.


அந்த விமானங்கள் தரையிறங்காமல் தரையை தொட்ட படியும் திடீரென மேலே எழும்பியும் பறந்து ஒத்திகையில் ஈடுபட்டன. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதன் மூலம் தரை இறங்குவதற்கு உகந்ததாக ஓடுதளம் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த சோதனை ஓட்டத்தின் போது தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்களும் விலங்குகளும் நுழைவதை தடுக்க ஓடுதளத்தை சுற்றி இருபுறமும் வேலை அமைக்கும் வேலி அமைக்கும் வேலைகள் பாக்கி இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





 




Similar News