இலவச பேருந்து படுத்தும் பாடு - மூதாட்டி என்றும் பாராமல் ஆபாசமாக திட்டிய பேருந்து நடத்துனர்

அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துனர் தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-12-16 13:06 GMT

அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துனர் தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துனர் தரைக்குறைவாகவும், அசிங்கமாகவும் பேசிய காட்சிகள் வெளியான நிலையில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர்-திருக்கருக்காவூர் வழித்தடத்தில் சென்ற தடம் எண் 34 ஏ என்ற அரசு பேருந்து மெலட்டூரில் ஏறிய மூதாட்டி தஞ்சாவூருக்கு சென்ற நிலையில் மீண்டும் அவர் அதே பேருந்தில் ஏறியுள்ளார், அதனால் நடத்துனர் ரமேஷ் குமார் மூதாட்டியை தரக்குறைவாக பேசினார்.

இதனை சக பயணிகள் வீடியோ எடுத்து பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் நடத்துனர் ரமேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.



Source - Polimer News 

Similar News