'பைக் டாக்சியில்' பயணம் செய்த கேரள இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சகாபுதீன், அக்தர்!
பெங்களூருவில் பைக் டாக்ஸியில் பயணம் செய்த கேரளா இளம் பெண்ணை கூட்டாக கற்பழித்த ஓட்டுனர் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூரில் ஓலா, ஊபர், வாடகை ஆட்டோக்கள், கார்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதுபோல் மோட்டார் சைக்கிள் கட்டணம் செலுத்தி ஓட்டுனரின் பின்னால் அமர்ந்து பயணிக்கும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இது 'பைக் டாக்ஸி' என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் 'பைக் டாக்சியில்' பயணம் செய்த கேரளா இளம் பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் பின்வருமாறு:-
கேரளாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். இந்த இளம் பெண் பி.டி.எம் லே - அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இரவு வேலை முடிந்ததும் அந்த இளம் பெண் வீட்டிற்கு செல்ல 'பைக் டாக்ஸியில்' முன்பதிவு செய்திருந்தார்.அதன்படி அங்கு வந்த பைக் டாக்ஸி ஓட்டுனரான சகாபுதீன் அந்த இளம் பெண்ணை பிக்கப் செய்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இளம் பெண் மதுபோதையில் இருப்பது பற்றி சகாபுதீனுக்கு தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த இளம் பெண் மதுபோதையில் சகாபுதீனிடம் தனக்கு சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை அடுத்து இளம் பெண்ணுக்கு சிகரெட் வாங்கி கொடுத்த சகாபுதீன் இளம் பெண்ணே அவர் புக்கிங் செய்த முகவரியில் விடாமல் தான் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் தனது நண்பரான அக்தர் என்பவரையும் தனது வீட்டிற்கு சகாபுதீன் வரவழைத்து உள்ளார். பின்னர் இளம் பெண்ணை சகாபுதீனும் அக்தரும் சேர்ந்து மாறி மாறி கற்பழித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே கூறக்கூடாது என்று இளம் பெண்ணை இரண்டு பேரும் மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.