புத்தாண்டை முன்னிட்டு ஏழுமலையானை தரிசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் சேகர் ரெட்டி உடன் இருந்தார். தரிசனத்திற்கு பின் திருமலையில் உள்ள அன்னதான கூடத்திற்கு சென்ற ஆளுநர் குடும்பத்துடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.