இந்திய கடற்படை தளத்தில் விபத்துக்குள்ளான இரண்டு விமானிகளின், நலம் விசாரித்தார் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய கடற்படை தளத்தில் விபத்துக்குள்ளான இரண்டு விமானிகளின், நலம் விசாரித்தார் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
கோவாவில் இந்திய கடற்படை தளத்தில் இருந்து மிக் 29 கே ரக பயிற்சி விமானம் ஒன்று வழக்கம்போல் பயிற்சி மேற்கொள்வதற்காக கேப்டன் எம். ஷியோகாண்ட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் தீபக் யாதவ் ஆகிய 2 விமானிகளுடன் பறந்து கொண்டிருந்தது. திடீரென வலதுபுறம் ரெக்கையில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. எனினும் அதில் இருந்து 2 விமானிகளும் பேராஷூட் உதவியுடன் வெளியே குதித்து தப்பி விட்டனர்.
இந்நிலையில், கோவாவில் மிக் ரக பயிற்சி விமான விபத்தில் இருந்து தப்பிய 2 விமானிகளிடம் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நலம் விசாரித்து உள்ளார். இருவரும் நலமுடன் உள்ளனர் என்று கிடைத்த தகவல் மிகுந்த திருப்தியளிக்க கூடியது. அவர்கள் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக வேண்டி கொள்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்