ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - கார்த்தி சிதம்பரத்தின் 11 கோடி சொத்துக்கள் முடக்கம், அடுத்து என்ன?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சம்பந்தமாக கார்த்தி சிதம்பரத்தின் ரூபாய் 11 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Update: 2023-04-19 13:15 GMT

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய நிதி மந்திரியாக பா.சிதம்பரம் இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது . இதற்கு பிரதி உபகாரமாக ஐ.அஎன்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது . அதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்தது.


இந்த வழக்குகளில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும் பா. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். நிலுவையில் உள்ள இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நான்கு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில் கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.




Similar News