அயோத்தியில் ராமர் கோவில்: ஜப்பானிய அனிமேஷன் இயக்குனரான யுகோ சகோவின் அற்புதமான திரைப்படப் பங்களிப்பு.!
அயோத்தியில் ராமர் கோவில்: ஜப்பானிய அனிமேஷன் இயக்குனரான யுகோ சகோவின் அற்புதமான திரைப்படப் பங்களிப்பு.!
ராமாயணம், திரைப்படங்களாகவும் தொடர் கதைகளாகவும் பல்லாண்டுகளாக பல ரூபங்களில் வலம் வருகிறது. ராமாயணத்தை ஒரு கார்ட்டூன் அனிமேஷன் வடிவில் தந்ததில் ஜப்பானிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான யுகோ சகோ பல தலைமுறைகள் தாண்டியும் மக்களின் மனத்தைத் தொடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காவியத்தை வடிவமைத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. யுகோ சகோ புத்த மதத்தை சேர்ந்தவர். அவர் மட்டும் வேறு ஒருவரிடம் 'ராமாயணா- இளவரசர் ராமரின் புராணம்' என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கும் பொறுப்பை விட்டிருந்தால், இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்காது.
சேதுசமுத்திர பாலத்தை கட்டி, ராணுவத்துடன் இலங்கையை நோக்கி ராமர் அணிவகுக்கும் போது, ஒரு ஆமை, ஒரு ஆக்டோபஸ், ஒரு மான் என அனைத்து சிறு சிறு உயிரினங்கள் கூட ராமபிரானுக்கு உதவி செய்வதை அவ்வளவு அற்புதமாக சித்தரித்திருப்பார். அந்த சித்திரம் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
ஸ்ரீ ரகுவர் கி வானர சேனா சேது பாந் ரஹி ,
ராவணா கி ஜீவன் கா ரக்ஷக் ஜக் மெய்ன் கோயி நஹின்
அதாவது ராமர் பாலத்தை கட்டிக் கொண்டிருக்கிறார், இந்த அண்டத்தில் யாராலும் ராவணனை காப்பாற்ற முடியாது என்ற இந்தப் பாடல் வரிகள் வரும் பொழுது கடலுக்குள் இருக்கும் சாதுவான மீன் கூட கற்களை அடுக்கி வைக்க உதவி செய்து கொண்டே இருந்தது.
இவையெல்லாம் சகோ பல்லாண்டுகளாக ராமாயணத்தை எந்த அளவு படித்து இருக்கிறார என்பதற்கு சில உதாரணங்கள். இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆன பிறகும் கூட குழந்தைகளுக்காக ராமாயணத்தை திருப்பிச் சொல்வதில் இந்த சித்திரத்தை மிஞ்ச எதுவும் இல்லை. இது நம்மை சுற்றி இருக்கும் சூழல், தாவரங்கள், விலங்குகள் என அனைத்தின் கொண்டாட்டம் ஆகும். தன் தந்தை தசரதரின் இறப்பைப் பற்றி கேள்விப்படும் ராமரின் தோள்களில் ஒரு அணில் அமர்ந்திருக்கிறது.