இந்தியாவில் முதன் முதலாக ஹிஜாபை எரித்து போராடிய கேரள பெண்கள்
கேரள இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை எடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை எடுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 'கேரள யுத்திவாடி சங்கம்' என்ற பகுத்தறிவு அமைப்பின் சார்பில் சுதந்திரமான சிந்தனை தொடர்பான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
கருத்தரங்கம் முடிந்த பின் மேற்காசிய நாடான ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சில பெண்கள் ஹிஜாபை எரித்தனர். இப்படிப்பட்ட போராட்டங்கள் நடந்த நாட்டில் நடப்பது இதுவே முதல் முறை.