பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தான்சானியா பிரபலம் கிலி பால்!

Update: 2022-03-01 07:39 GMT

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தன்னை பாராட்டியதற்காக பிரதமர் மோடிக்கு சமூக ஊடக பிரபலமான தான்சானியாவைச் சேர்ந்த கிலி பால் நன்றியை தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையின் போது அகில இந்திய வானொலி மூலமாக மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் வாயிலா பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, இந்தி பாடல்களை உதட்டளவில் ஒத்திசைத்து அதன் மூலமாக சமூக வலைதளங்களில் பிரபலமான தான்சானியா நாட்டின் இரட்டை சகோதரிகளான கிலி பால் மற்றும் நீமா உள்ளிட்டோர் இந்திய இசையின் மீது ஆர்வமாக இருப்பதை காண்பிக்கிறது.

அவர்களின் ஆர்வத்திற்கு நன்றி என பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதே போன்று நமது இளைஞர்களும் இந்திய மொழிகளின் பாடல்களை உலகறிய செய்ய வேண்டும். அதற்கான வீடியோக்களை உருவாக்க வேண்டும். அவர்களை உலகறிய பிரபலமாக்குவது மட்டுமின்றி புதிய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: NDTV

Tags:    

Similar News