தொழிலாளர் வைப்பு நிதி வட்டி 8.15 சதவீதம் ஆக உயர்வு - மத்திய அரசு ஒப்புதல்
தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறங்காவலர்கள் கூட்டம் நடந்தது. அதில் 2022 - 2023 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து சந்தாதாரங்கள் கணக்கில் 8.15 சதவீத வட்டியை வரவு வைக்குமாறு கள அலுவலகங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI