குறிப்பிட்ட ஜாதியினரை ஆபாசமாக இழிவுபடுத்திய பா.ரஞ்சித்தின் வசனகர்த்தா
குறிப்பிட்ட ஜாதியினரை ஆபாசமாக இழிவுபடுத்திய பா.ரஞ்சித்தின் வசனகர்த்தா
பா.ரஞ்சித் இயக்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் காலா. இதில் எழுத்தாளராக பணியாற்றியவர் மகிழ்நன். அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட ஜாதியினரை ஆபாசமாக கொச்சைப்படுத்தி பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் காலா படத்தில் வசனகர்த்தாவாக இருந்ததும், அதற்கு முன்னர், நியூஸ் 7 தமிழ் மற்றும் புதிய தலைமுறை ஆகிய செய்தி தொலைக்காட்சிகளில் பணி புரிந்ததும் அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் மகிழ்நனின் ஜாதி வெறியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : மாடை கடவுள் என்றால், நான் கடவுளை சாப்பிடுபவன் : தமிழ் இனத்தை கொச்சைப்படுத்திய பா. ரஞ்சித்
இதையும் படிக்க : ராஜராஜ சோழன் அயோக்கியன் அவன் ஆட்சி கேவலமான ஆட்சி சாதிவெறியை தூண்டிய இயக்குனர் ப.இரஞ்சித்!
பா.ரஞ்சித்தின் ஜாதி வெறி, இன வெறி மற்றும் மத வெறி பேச்சுக்களின் சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது அவரின் வசனகர்த்தாவும் அவரை போன்றே ஜாதி வெறி கருத்துக்களை பரப்பி வருவது தமிழ் திரையுலகமே இப்படி ஜாதி வெறியர்களின் கையில் சிக்கி கொண்டு விட்டதோ என்ற கேள்வி எழுகிறது.