இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவை எப்போது துவங்கும்? - வெளியான தகவல்கள்

டிசம்பர் மாதத்திற்கு பிறகு தான் 5ஜி தொழில்நுட்பம் தொடங்கும் என சுதந்திர தின உரையில் மோடி தகவல்

Update: 2022-08-18 13:30 GMT

டிசம்பர் மாதத்திற்கு பிறகு தான் 5ஜி தொழில்நுட்பம் தொடங்கும் என சுதந்திர தின உரையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


மத்திய அரசும் தொலைதொடர்பு நிறுவனங்களும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நாட்டின் 5ஜி தொழில்நுட்பம் தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் டிசம்பருக்குப் பிறகுதான் வாய்ப்பு உள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் முழு அளவில் சென்றடைய சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. உரையில் பிரதமர் மோடி இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் வர உள்ளதாக அறிவித்து உள்ளார்.


Source -Polimer news

Similar News