திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி - இத்தனை கோடியா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை வழங்கி உள்ளார் முகேஷ் அம்பானி.

Update: 2022-09-17 12:21 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை வழங்கி உள்ளார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று அதிகாலை திருப்பதி வருகை புரிந்தார். மலையடி வாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு திருமலையில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு நடைபெற்ற ஒரு மணி நேர சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார்.

வழிபாட்டிற்கு பிறகு சன்னதியில் வைத்து காணிக்கையாக ஒன்னரை கோடி ரூபாய் காணிக்கையாக திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரியிடம் முகேஷ் அம்பானி வழங்கினார். முகேஷ் அம்பானி பெருமாளின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News