மர்ம முறையில் மயமான கல்லூரி மாணவி - பெற்றோரிடம் அலட்சியமாக பதில் கூறிய 'அவர் லேடி நர்சிங் கல்லூரி' நிர்வாகம்
தஞ்சையில் 'அவர் லேடி நர்சிங் கல்லூரி'யில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் 'அவர் லேடி நர்சிங் கல்லூரி'யில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சையில் உள்ள 'அவர் லேடி நர்சிங்' கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் இருந்து அவர் காணாமல் போனதாக கடந்த 25ஆம் தேதி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரிக்கு வந்த மனைவியின் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உரிய பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மாணவியின் செல் போன், உடைமைகள் என அனைத்தும் கல்லூரி விடுதியில் உள்ள நிலையில் மாணவி மட்டும் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அலட்சிய கல்லூரி நிர்வாகம் குறித்தும் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.