வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன்! அவருடைய நுண்ணறிவு மற்றும் உள்ளீடுகளை நான் எப்பொழுதும் மதிப்பேன்! பிரதமர் பதிவு!
கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு, பொதுசேவை ஆகிய துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது தற்போது முன்னாள் பிரதமர்களான பி. வி. நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஜி அவர்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் மற்றும் பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது. அவர் எனக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவர், அவருடைய நுண்ணறிவு மற்றும் உள்ளீடுகளை நான் எப்போதும் மதிப்பேன் என வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் நாட்டிற்கு செய்த சேவைகளை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்.பதிவிட்டுள்ளார்.
Source : Asianetnews Tamil