அடுத்து ஒரு முறை திமுக ஆட்சியை பிடித்தால் கனிம வளங்கள் ஒன்று கூட இருக்காது - தூத்துக்குடியில் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி..!

Update: 2024-04-25 12:56 GMT

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவனை வைத்து ஒரு மர்ம கும்பல் ரேஷன் அரிசியை கடத்தி வந்த சம்பவமும் அதனை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் திமுக நிர்வாகியான கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவமும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. 

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அதில், தமிழகத்திற்கு திமுக ஆட்சி என்று வந்ததோ அன்றிலிருந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவர்களுக்கு இன்னும் ஒரு ஆட்சியை மட்டும் கிடைத்து விட்டால் மேற்கு தொடர்ச்சி மலையே இருக்காது, கனிம வளங்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விடுவார்கள்! என்று கூறியுள்ளார். 

மேலும், தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ள போதை பொருட்களின் புழக்கம் தமிழக மக்கள் தங்கள் குழந்தைகள் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் திராவிட மாடல் அரசு தான் காரணம்..! மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதை 140 கோடி மக்களும் விரும்புகிறார்கள் என்று பேசினார். 

Source : Dinamalar 

Similar News