மொழியை அரசியலாக்குவது தேவையற்றது: முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து.!

Update: 2025-03-20 06:36 GMT
மொழியை அரசியலாக்குவது தேவையற்றது: முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து.!

ஆந்திர சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொடர் அமராவ தியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பேசியதாவது, தாய்மொழி மிகவும் முக்கிய மானது. தாய்மொழியில் பயின் றவர்களே அதிக அறிவு சார்ந்தவர் களாக உள்ளனர். இதில் சந்தேகம் இல்லை. எந்த ஒரு மொழியை யும் தாழ்த்தி பேசக்கூடாது. இங்கு தாய்மொழி தெலுங்கு. இந்தி தேசிய மொழி. ஆங்கிலம் சர்வ தேச மொழி. நம் நாட்டு மக்கள், மாணவர்கள் கல்வி பயிலவோ அல்லது வேலை நிமித்தமாகவோஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்கின்றனர். தேவைப்பட்டால் ஜப்பான், பிரெஞ்ச் மொழிகளை இங்கேயே கற்றுக்கொண்டால், அங்கு செல் லும்போது மிகவும் சுலபமாக மக் களிடம் பழகலாம். வாழ்வதற்காக எத்தனை மொழிகளை வேண்டு மானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தாய்மொழியை மறக்க மாட்டோம்.


தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொண்டால் டெல்லி செல் லும்போது மற்றவர்களிடம் கூச் சப்படாமல் பேசலாம். ஆதலால் மொழி குறித்து அரசியல் செய் வது தேவையற்றது. இவ்வாறு சந் திரபாபு நாயுடு பேசினார்.

Similar News