ஜெபத்திற்கு சென்றவர்களின் மீது வலுக்கட்டாயமாக குங்குமம் பூசியதாக எழுந்த புகார்!! விசாரணையில் வெளிவந்த உண்மை!

Update: 2025-09-27 15:22 GMT

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோர் கீழக்​கல்​லூர், நடுக்​கல்​லூர் கிராமத்திற்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்றபோது மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், இந்து முன்​னணி மாவட்​டச் செய​லா​ளர் மணி​கண்​டன் மகாதேவன் மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த அங்​கு​ராஜ் என 3 பேர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அவர்களை அருகில் இருந்த கோவிலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று நெற்றியில் குங்குமத்தை வைத்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டு செல்ல கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் டேவிட் நிர்​மல்​துரை சுத்தமல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த விசாரணையில் போதகர் டேவிட் நிர்​மல்​துரை தங்களிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விட்டு அவராகவே அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று விபூதி பூசி கொண்டு இந்து மதத்தை அவதூறாக பேசியதாக வழக்​கறிஞர் மணி​கண்ட மகாதேவன் சுத்​தமல்லி காவல் நிலை​யத்​தில் புகார் மனு அளித்துள்ளார். இது தற்பொழுது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News