காந்தி ஜெயந்தி தினத்தில் ஒன்றரை கோடி கதர் விற்பனை - பிரதமர் மோடி பாராட்டு!
காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லியில் உள்ள காதிபவனில் ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புள்ள கதர் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி பிறந்த தினம் அக்டோபர் இரண்டாம் தேதி கதர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி டெல்லியில் கன்னோட்பிளேஸ் பகுதியில் உள்ள காதிபவனில் காந்தி ஜெயந்தி தினத்தில் ரூபாய் ஒரு கோடியை 52 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள கதர் மற்றும் கிராம தொழில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இது சாதனை அளவாகும். இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் .அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கதர் பொருள்கள் விற்பனையில் படைக்கப்பட்டுள்ள சாதனை, கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின் வலிமையான அடையாளத்தை காட்டுகிறது . மக்களுக்கு பிடித்திருப்பதால் கதர் விற்பனை தொடர்ந்து புதிய சாதனைகள் படைக்கும் என்று நம்புகிறேன். அத்துடன் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை இது வலுப்படுத்தும் இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI