ஆர்.எஸ்.எஸ் கிளை பொறுப்பாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு - தமிழகத்தில் குறிவைக்கப்படும் இந்துத்துவா தலைவர்கள்

ஆர்.எஸ்.எஸ் கிளை பொறுப்பாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-24 09:26 GMT

ஆர்.எஸ்.எஸ் கிளை பொறுப்பாளர் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பின் பொறுப்பாளர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது, கோயம்புத்தூர் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரள கேந்திர பொறுப்பாளரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதும், பெட்ரோல் குண்டு வீசும் நிகழ்வு குறித்தும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாலகிருஷ்ணன் துணை ஆணையர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த சம்பவம் கொங்கு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Source - Polimer News 

Similar News