தமிழகத்தில் பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் - பியூஸ் கோயல்
தமிழகத்தில் பா.ஜ.க மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என மதிய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பஸ் நிலையத்தில் பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மதிய தொழில் முனைத்துறை மந்திரி பியூஸ் கோயல் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு, ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு, ஐந்து லட்சம் மருத்துவ காப்பீடு, தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம், உள்ளிட்ட திட்டங்களை வழங்கினார்.பின்னர் மதிய மந்திரி பியூஸ் கோயல் பேசியதாவது:-
சென்னையையும் சென்னை மக்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய கலாச்சாரத்தின் தலைநகரமாக சென்னை விளங்குகிறது. தமிழக மக்கள் நமது பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சியை பிரதமர் எதிர்பார்க்கிறார். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என பிரதமரும் தமிழக மக்களும் விரும்புகின்றனர். ஆனால் ஏழைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளாமல் தமது மகன், மருமகனின் முன்னேற்றத்தில் கவனம் கொண்டுள்ள ஆட்சியாளர்களால் அத்தகைய ஊழலற்ற ஆட்சியை தர முடியாது. நரேந்திர மோடியை கண்டால் அவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. அதனால் அரசு விழாக்களில் மோடியின் படத்தை அவர்கள் வைப்பதில்லை.
தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பதை கண்டு ஆளுங்கட்சியினர் பயப்படுகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய தேவையான உணவுப்பொருட்களை பிரதமர் வழங்கினார்.தற்போது வரை அந்த திட்டங்கள் தொடர்கின்றன. வீடு இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.3 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்து அவர்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றியுள்ளார். இவை அனைத்தும் தமிழகத்திற்கும் சேர்த்தே செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய செய்யாமல் தடை செய்து வருகிறது.