சபரிமலை விமான நிலைய ஒப்புதலுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
சபரிமலை விமான நிலைய ஒப்புதலுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக கோட்டயத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் , "புதிய விமான நிலைய இடத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பது சுற்றுலாவுக்கு குறிப்பாக ஆன்மீக சுற்றுலாவுக்கு, நல்ல செய்தி". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.