பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; பிரதமர் நரேந்திர மோடி எம்பியாக பதவி ஏற்றார்!!
பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது; பிரதமர் நரேந்திர மோடி எம்பியாக பதவி ஏற்றார்!!
17- வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக பாராளுமன்ற இடைக்கால தலைவராக, வீரேந்திர குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து இடைக்கால சபாநாயகர், புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வைருகிறார். வாரணாசி தொகுதி எம்பியாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவரைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மற்ற எம்பிக்களும் பதவி ஏற்று வருகின்றனர். இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர்.