இன்று முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு #PMModi #Covid19
இன்று முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு #PMModi #Covid19
ஜூலை மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அன்லாக் 2.0 விதிமுறைகள் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் கலந்துரையாடுகிறார்.
இன்றைய தினத்தில் அன்லாக் 3.0 தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது கொரோனோ பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கும் வேளையில் இன்றைய இந்த பிரதமரின் கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.