விஜயகாந்த் உடல்நலம் பற்றி பிரேமலதாவிடம் விசாரித்த பிரதமர் மோடி - என்ன கூறினார்?
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல் நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல் நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அவரது வலது காலில் 3 விரல்கள் எடுக்கும் அளவிற்கு சிகிச்சை சென்றுள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு இது குறித்த அறிக்கை ஒன்று தே.மு.தி.க தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துள்ளார். மேலும் விஜயகாந்த் விரைந்து நலம் பெற ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி பிரேமலதா அவர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.