அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்த பிரதமர் மோடியின் அரசு

நெல்லை அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக பிரதமர் மோடியின் அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-08-13 06:15 GMT

நெல்லை அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக பிரதமர் மோடியின் அரசு அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது, இந்த மடையில் அமர்ந்து தான் அகஸ்தியர் தமிழ் வளர்த்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மலையின் உச்சியில் அகஸ்தியர் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு வாகனங்கள் செல்ல முடியாதபடி அடர் வனப் பகுதியாக காணப்படுகிறது.

இதனால் பக்தர்களாக அகஸ்தியர் கோவிலுக்கு நடை பயணமாக செல்வார்கள். அதன்படி இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் பகல்/இரவு என கடுமையாக நெல்லை மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, தீர்த்த அருவி, பேயாறு ஆகியவற்றை கடந்து அகஸ்தியர் மலைக்கு சொல்வார்கள்.

இதனால் புலிகள் சரணாலய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 2002 ஆம் ஆண்டு இவ்வழியாக பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதன் காரணமாக பக்தர்கள் தற்பொழுது மலையின் மறுபுறம் உள்ள திருவனந்தபுரம் வழியாக சென்று வருகிறார்கள். பொதிகை மலை 6000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது, மேலும் பொதிகை மலை 121 வகை உயிரினங்கள் 157 வகை ஊர்வன விலங்குகள் மற்றும் அரிய வகை தாவரங்களும் காணப்படுகிறது.


இந்நிலையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு பெற்ற 1297 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


ஏற்கனவே தமிழகத்தில் நாலு யானைகள் காப்பகம் உள்ள நிலையில் ஐந்தாவது காப்பகமாக அகஸ்தியர் மலையை அறிவித்து மத்திய சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.


Source - Maalai Malar

Similar News