சுகாதாரத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தும் : மன்சுக் மாண்டவியா கொடுத்த அசத்தல் அப்டேட்!

சுகாதார துறையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

Update: 2023-05-25 05:15 GMT

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில்  'அனைவருக்கும் சுகாதாரம்' என்ற கருப்பொருளில் நடைபெறும் 76- வது உலக சுகாதார மாநாட்டில் ஒன்றை  சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு பேசினார். அப்போது கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்கள் உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளன. தொற்று சவால்களுக்கு எதிராக போரிடுவதில் உலகை இணைத்துள்ளது என்று குறிப்பிட்டார் .


'இந்தியாவில் சிகிச்சை,  இந்தியா வழங்கும் சிகிச்சை' என்ற அமர்வில் பேசிய அமைச்சர் மாண்டவியா சுகாதார சவால்கள் சர்வதேச எல்லைகளை கடந்தது என்பதை கொரோனா பெருந் தொற்று உணர்த்தியுள்ளது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. சுகாதார பணியாளர்களின் திறன் கட்டமைப்பை மேம்படுத்துதல், சுகாதாரத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

Similar News